Showing posts with label கலாப்ரியா. Show all posts
Showing posts with label கலாப்ரியா. Show all posts

Tuesday, July 20, 2010

கலாப்ரியா கவிதை

ஒரு மொழியில் ,ஒரு இனத்தில் ,
ஒரு முறை தான் நிகழும் அற்புதம் கலாப்ரியா 
                                                                                                           ---விக்கிரமாத்தியன் 



இந்த வருடம் சிற்பி இலக்கிய விருது  வாங்கும் திரு கலாப்ரியா அவர்களுக்கு வாழ்த்துக்கள் .அவருடைய கவிதை ஒன்றினை மொழி மாற்றம் செய்ய முயற்சித்துள்ளேன் .
என் முயற்சி வெற்றி என்றால் மகிழ்ச்சி
கவிதையினை பங்கம் செய்திருந்தால் மன்னிக்கவும்
தமிழின் இனிமையையும் அழகையும் எந்த மொழிலும் புகுத்தல் கடினம் ..எனினும் என் சிறு பிரயர்த்தனை .

----------------------------------------------------------------------------------------------------------------------------------

                                         DID WE MEET?

WE FAILED TO MEET
THOUGH
WE DID MEET

BY CONSENSUS
WE CHOSE
NOT TO SIT BY THE TREE
WITH TREPIDATION
FOR THE BIRDS DROPPINGS
ON US

THE MOMENT
WE SAT ON GRASS
WE GLIMPSED AT AN ANTHILL
FRANTICALLY TRYING TO CAVE IN ,
AND OUT CAME SOME INSECTS
UNBALANCED AND SCURRYING ....
YOUR FORE FINGER TOO REMAINED
A BOOK MARK,
TO OPEN THE PAGE YOU LIKED
HOWEVER IDLE FOR LONG

AS WE FAIL TO NOTE ,
THE FINEST ATTRIBUTES OF A MOVIE ,
JUST BY READING AND FAILING ,
AND TRAILING BEHIND THE SUBTITLES ..

WE COULD NEVER
MEET EACH OTHER
ALTHOUGH...
WE MET ONE FINE DAY

-----------------------------------------------------------------------------------------------------------------

                                           துணைத்தலைப்பு
நம் சந்திப்பு
நிகழாமல் போனது

 பறவைகள்
தலையில் தோளில்
எச்சமிடலாமெனவோ
என்னவோ
மரத்தடியை ஏற்கனவே
தவிர்த்திருந்தோம்
சற்றே மனம் பகிர்ந்து .

புல்தரை
மீதமர்ந்த உடனேயே
கலையத்தவிக்கும்
இரும்புப் புற்றை கண்ணுற்றோம்
வேறு சில பூச்சிகளும்
சமன் குலைந்து
இடம் பெயர்ந்தன
படித்துக் கொண்டிருந்த பக்கத்தை
உடன் எடுக்கத் தோதுவாய்
உன் சுட்டு  விரலை
நெடுநேரமாய் ஒரு
புத்தகத்துக் குள்ளேயே
வேறு வைத்திருந்தாய்

துணைத் தலைப்புகளையே
பார்த்துகொண்டிருந்ததில்
வாசிக்க முயன்று தோற்றத்தில்
படவிழா சினிமாவின்
மற்ற நல்ல பரிமாணங்களை
தவற விட்டது போல்

நம் சந்திப்பு
நிகழாமல் போனது
நாம் சந்தித்த அன்று