Wednesday, April 27, 2011

கவிதாவஸ்தை


மேகங்களில் நம் 
மனவுருவைக்  காண்பதோ 
ஒரு நாய் குட்டியை வளர்ப்பதோ 
பத்துக்கு பத்து புள்ளி வைத்து 
கோலம் போடுவது போலோ 
இல்லை 
ஒரு கவிதை வரியை எழுதுவது
முதல், ஓர் ஆணும் பெண்ணும் 
தயங்கி ,முயன்று ,வெல்லுவது 
போன்ற வாதையின் 
ஆயிரம் மடங்கு அவஸ்தையில் 
வந்து விழுகிறது 
ஒரு கவிதையின் கரு.
பின் முயங்கிக் களைத்து
புன் சிரியுடன்
கண் செருகும் 
வாலிபத்தின்  வனப்போடு 
அதன் முதல் வரி.
ஒரு பூனைக் குட்டியை 
தடவுவது போல் 
அவ்வளவு எளிதாக அமைவதில்லை 
அடுத்த வரியும் 
அதற்கடுத்த வரியும் கூட .... 
   
 

Tuesday, April 26, 2011

மீண்டு(ம்) வந்துவிட்டேன்