Wednesday, May 7, 2008

புரிந்ததா?

எதிலும் லயிக்காத
இலவம் பஞ்சாய் மனம்
இலக்கிலாமல் ஓடி ஆட
இலக்கில்லா வேதனையில்
ஆழ்மனம் தேடிவாட....
எதில்தான் லயிக்கும்
என ஆறறிவு கேள்வி கேட்க......
தேடலின் சுமையொடு
தூங்கா விழிகள் ..............
வேண்டாம் என அறிவு மாற்றி வைக்க ,
வேண்டும் என இதயம் இரங்கி நிற்க,
ஆம் இல்லை என மனம் பிரித்து பேச ,
தேடலின் விடையாய் ..........
என் சிரிப்பின் விலையாய்...........
அருகிலேயெ இருப்பினும்
நெடுந்தூரப் புள்ளியாய் நீ..............
என் தேடலே
தேடல் புரிந்ததா இப்பொதாவது?