Wednesday, August 22, 2012

நாய்க் கனவு

ஓர் அபூர்வமான
மார்கழி மழைநாளில்
வீட்டில் சரணடைந்தது
கருப்பு நாய்க் குட்டி ஒன்று .
பறந்து பறந்து
கொட்டங்கச்சி  பால் அருந்தி
தள்ளாடும் நடை மயக்க
நானறியாமல் அதன் தோழியானேன் .
அதற்கென ஒரு  கிண்ணம்
படுக்க ஒரு விரிப்பு
என பழக்கியும்
பல நாட்கள்
என் கூந்தல் கதகதப்பில்
கண்ணுறங்கும் .
குழந்தையென
ஊஞ்சலாட்டி தூங்கியபின்
அதன் முகம் பார்த்து
வினாவொன்று எழும்
என்றாவது
எப்போதாவது
அதன் கனவில்
நான் வருவேனா?


(நன்றி பூவரசி இதழ் )