Tuesday, March 17, 2020

அம்மை



சிறிது கன்னம் பருத்து
தன் அம்மை போல் தோற்றமிடும்
பெரியபாளையத்தவளையும்
வெக்காளித் தாயையும்
பூஜையறையில் மாட்டிவைத்து
மா...மா....வென்று
கொஞ்சுகிறாள்,கோபப்படுகிறாள் அவள்.
காலைகண் விழித்து உடன் காண
வாகாய் மாட்டிய
அம்மாவின் புகைப்படத்திலிருந்து
புன்சிரியுடன் கீழே விழுகிறது
மாலையிலிருந்து ஒரு மல்லிகைப்பூ.

No comments: