Tuesday, March 17, 2020

சகா 3

சகா
====
உனக்குத் தெரியும் தானே
ஜீவனற்றவை
உயிரோட்டத்தில் கலந்து விட்டால்
அஜீவன் ஜீவனடையுமென
சென்றும். உள்ள ஓரு கால வெள்ளம் தான்
உதிர்ந்த இம்மனச்சிறகை
படபடக்கச் செய்கிறது
பார்! காணும் அனைவரும்
சிறகணைக்க பறக்கின்றனர்.
கைகிட்டும் போதல்லவா தெரியும்
அது சவச்சிறகென.
உனக்கென்ன?
எப்பொழுதுமே
VOYEUR தானே நீ
சிறிது நேரம்
அப்புன்னகையை மறைத்துக் கொள்ளேன்
கொஞ்சம்

No comments: