Tuesday, March 17, 2020

சகா 13

என் நினைவு வரும்போதெல்லாம்
கடல் மேல் கல்லெறியாதே
அலைகள் காதல் இசைக்கின்றன!

என்னைப் போல்
வானோக்கி கண்ணீர் வீசு
நட்சத்திரங்களாகட்டுமவை.

பின் இரவில்
ஒலியிலாது சத்தமிடு
நாமறிந்த science
கொண்டு சேர்க்கும் அதை
திரைப்படம் போல்
என்றெள்ளாதே
என் இறுதி மூச்சில்
என் இருகைகள் பற்றிச் சொல்
என் கண் முத்து.

வா!
கடை நாட்களிலாவது
பொய் தள்ளிச்
சாவோம்.

2 comments: