Friday, July 2, 2010

வெளிச்சுவர் லவ்

யாரோ ஒருவன்
எதோ நினைவில்
புதிதாய் வெள்ளை அடித்த
வெளிச்சுவரில்
பெரிதாய் "ஐ லவ் யு "
என கிறுக்கி வைத்து விட்டு
போய்விட்டான்
திருப்பி
அதையழித்து வெள்ளை அடிக்கலாமா
என கேட்டுவந்தவனிடம்
'வேண்டாம் அங்கேயாவது
அது  இருந்து விட்டு போகட்டும்'
என ஒரு நடுங்கிய குரல் கேட்டது
வீட்டின் ஓர்  இருட்டறையிலிருந்து ....

43 comments:

தமிழ் உதயம் said...

அங்கேயாவது
அது இருந்து விட்டு போகட்டும்'////


மௌனம் பேசிய உண்மை.
மனதுள் இறங்கிய கவிதை.

Ashok D said...

:)

ஜெய்லானி said...

//வேண்டாம் அங்கேயாவது
அது இருந்து விட்டு போகட்டும்'
என ஒரு நடுங்கிய குரல் கேட்டது
வீட்டின் ஓர் இருட்டறையிலிருந்து ..//

சுவர் இல்லாத சித்திரங்கள்..

Jeyamaran said...

தாமதமாக புரிந்தது மிக அருமை

vasu balaji said...

கடுகு:)

பனித்துளி சங்கர் said...

காதலிலும் , கவிதையிலும் எதார்த்தங்கல்தான் எப்பொழுதும் தலைமை தாங்குகின்றன . அதுபோல் உங்களின் கவிதையும் அருமை . பகிர்வுக்கு நன்றி !

Ahamed irshad said...

சூப்பருங்க...ரசித்த்த்த்த்த்த்த்த்து படித்தேன்.. அருமை..

Starjan (ஸ்டார்ஜன்) said...

கவிதை அருமை.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

'அது குட்டிச் சுவராய் இருக்குமோ?

ஹேமா said...

பத்மா...பாவம் விட்டிருங்க.
இருட்டில ஒரு மூலையா இருந்திட்டுப் போகட்டும் !

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு பத்மா.

Prasanna said...

வெளியில் வெள்ளை.. உள்ளே இருட்டு.. நல்லா இருக்கு :)

பாலா said...

valaiyayum azhag solla mudiyuthu ungalaala
fine kka superb

சுந்தர்ஜி said...

உள்ளன்பு வற்றி வெளிச்சுவரில் மட்டும் சருகாய் வேடம் தரித்து
வெள்ளை அடிப்போனிடம் நடுங்கிக்
கேட்ட அந்தக்குரல் நவீன நாளின்
குரல் மிக ஆழமாயும் அழகாயும்
வந்தது உங்கள் கவிதையில் பத்மா.

Unknown said...

:)

மங்குனி அமைச்சர் said...

nice one

சிவாஜி சங்கர் said...

:-/

சந்தனமுல்லை said...

:-))

ரிஷபன் said...

மனிதனின் ஆதார சுருதி.. அன்பு.. காதல். அந்த வார்த்தையைக் கேட்க.. சொல்லத் தவிக்கும் மனசு.
கவிதை படம் பிடித்த காட்சி வெகு அற்புதம்.

Unknown said...

அழகான கவிதை உள்ளர்த்தம் புரியூம் போது மிக மிக அருமை!!!

க.பாலாசி said...

அருமையா இருக்குங்க... இளைஞனோட உள்ளத்த அழகா பதிஞ்சிருக்கீங்க... (ஆமாம்..செவத்துலையாவது இருந்துட்டு போகட்டும்...சேம் ஃபீல்)

உயிரோடை said...

கடைசியா ஒத்துகிட்டாங்களா இருட்டறையில் இருந்தவங்க.

இல்லை தான் யார்டயோ சொல்ல முடியாததை இவன் சொல்லிட்டான் என்று நினைச்சிட்டாங்கல

r.v.saravanan said...

அங்கேயாவது
அது இருந்து விட்டு போகட்டும்

good

கவிதை அருமை.

பத்மா said...

@ தமிழ் உதயம்
கவிதை மனதுக்குள் இறங்கியதில் மகிழ்ச்சி
நன்றி நண்பா

@D R ashok :) thanks

ஆம் ஜெய்லானி ..சில சித்திரங்களுக்கு சுவர் கிடைப்பதில்லை


@வானம்பாடிகள் ...
உங்கள் விமர்சனமும் :) நன்றி

பத்மா said...

ஜெயராமன் முதல் வருகைக்கும் ,விமர்சனத்திற்கும் நன்றி

பத்மா said...

மிக்க நன்றி பனித்துளி

ரசித்த்த்த்த்த்த்த்த்து படித்ததிற்கு மிக்க்க்கக்க்க்க நன்றி இர்ஷாத்

நன்றி ஸ்டார்ஜன் சார்

@R R R HAHAHA

பத்மா said...

@ ஹேமா

ஆம் ஹேமா விட்டுடறேன்

பத்மா said...

@ பா ரா சார்

மிக்க நன்றி சார் .இது உங்கள் தாக்கம் தான்

பல விஷயங்கள் இப்படித்தானே பிரசன்னா ?நன்றி பிரசன்னா


@பாலா நன்றிப்பா.என்ன ஏதும் எழுதலையா ?

பத்மா said...

விமர்சனமே கவிதையாய் சுந்தர்ஜி ...
இதற்காகவே நான் இன்றும் நன்றாய் எழுத வேண்டும்
நன்றி

பத்மா said...

@ஆறுமுகம் முருகேசன்
@மங்குனி அமைச்சர்
@சிவாஜி சங்கர்
மூவருக்கும் நன்றி :)

பத்மா said...

வாங்க முல்லை ..
முதல் வருகைக்கும் ,உங்கள் புன்சிரிப்புக்கும் நன்றி .

பத்மா said...

ரிஷபன் மிக்க சந்தோஷமாய் உணர்கிறேன் ..
நன்றி

பத்மா said...

சுரேந்திரகுமார் வாங்க வருகைக்கும் விமர்சனத்திற்கும் நன்றிங்க

பத்மா said...

பாலாசி அழகா உங்க கண்ணோட்டதில பாத்துடீங்க
FETNA தேர்விற்கு பாராட்டுகள் நண்பா
நன்றி

பத்மா said...

அது அவங்களுக்கு தான் தெரியும் உயிரோடை ...
நன்றி

காமராஜ் said...

பத்மா க்ளாஸ். ரொம்ப சின்னதா சுருக்குன்னு.

Appu said...

edhuvum nalla closing :)

அன்பரசன் said...

Short and sweet.

R.Gopi said...

//'வேண்டாம் அங்கேயாவது
அது இருந்து விட்டு போகட்டும்' //

********

அதானே.... ஐ லவ் யூ என்பது அங்கேயாவது இருந்து விட்டு தான் போகட்டுமே...

ஆஹா... இருட்டறையிலிருந்து வந்த ஒரு திகில் குரல், சொன்னதோ ஒரு காதல் விஷயம்... உங்க கற்பனையின் எல்லை தான் எப்படி எப்படியெல்லாம் விரிகிறது...

கே. பி. ஜனா... said...

என்னமா மனசை சுண்டி இழுக்கிற கவிதை! கவிதையோடு சேர்ந்து மனசும் ஆடிற்று!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

மௌன ராகம்... அழகு பத்மா எப்பவும் போல

sakthi said...

அங்கேயாவது
அது இருந்து விட்டு போகட்டும்'
என ஒரு நடுங்கிய குரல் கேட்டது
வீட்டின் ஓர் இருட்டறையிலிருந்து .

வலியுடன் இருந்தாலும் அருமை

bogan said...

நல்லாருக்கு மேடம்