Friday, May 21, 2010

வார்த்தை விளையாட்டு

உனக்குமெனக்கும்
நடுவேயலைகின்றன
நமக்கான வார்த்தைகள்

ஒரே வார்த்தையை
இருவரும் எடுக்கும் நேரம்
அது இரட்டிப்பாகாமல்
நம் இருவரிடையகப்பட்டு
கண்சிமிட்டிச்  சிரிக்கிறது

நான் பேசநினைப்பதும்
உன்  மனதில் வருவதுமான
வார்த்தைகள்
பிரசவிக்கும் சமயமறியாது
வாதயோடலைகின்றன

நீ நினைத்தது
என்னிடமிருந்து வந்ததும்
நான் விரும்புவது
உன்னிடமிருந்து பிறக்கும் போதும்
இரசாயன மாற்றதிற்குட்பட்டு
நம்மையும் மாற்றுகின்றன .

இவ் வார்த்தை விளையாட்டில்
நாமறியாமல் ஈடுபட்டு
வார்த்தைகள் தேடிக்கொண்டே
கண்களால்
கதைக்கிறோம் நாம்  
  

51 comments:

ரிஷபன் said...

//கண்களால்
கதைக்கிறோம் நாம்//
வார்த்தைகள் அற்ற நிலை.. அதன் சுகமே அலாதி..

vasu balaji said...

மொத்தமாகவே ரொம்ப அழகு. ரிஷபன் சொன்னா மாதிரி மௌன மொழிக்கீடேது.

ஹேமா said...

காதல் அனுபவித்த ஆழமான
காதல் வரிகள்.அற்புதம் பத்மா.

r.v.saravanan said...

ஒரே வார்த்தையை
இருவரும் எடுக்கும் நேரம்
அது இரட்டிப்பாகாமல்
நம் இருவரிடையகப்பட்டு
கண்சிமிட்டிச் சிரிக்கிறது

காதலில் மௌன மொழி என்பது ஒரு பரவசம் வெளிபடுத்திய விதம் அருமை

க.பாலாசி said...

அருமைங்க... கண்களின் மொழிவிளையாட்டில் சிலநேரம் மௌனம்கூட வாயடைத்துப்போகும்... அருமையான எக்ஸ்ப்ரஸன்....

//நீ நினைத்தது
என்னிடமிருந்து வந்ததும்
நான் விரும்புவது
உன்னிடமிருந்து பிறக்கும் போதும்
இரசாயன மாற்றதிற்குட்பட்டு
நம்மையும் மாற்றுகின்றன .//

அடடா...அழகு....

ஈரோடு கதிர் said...

அழகான கவிதை

அன்புடன் அருணா said...

வார்த்தை விளையாட்டு நல்லாருக்கு!

அகல்விளக்கு said...

அருமைங்க...

Ashok D said...

ண்ணா... ரைட்டுங்ண்ணா...

Chitra said...

நீ நினைத்தது
என்னிடமிருந்து வந்ததும்
நான் விரும்புவது
உன்னிடமிருந்து பிறக்கும் போதும்
இரசாயன மாற்றதிற்குட்பட்டு
நம்மையும் மாற்றுகின்றன .


...... அருமையான வரிகள். :-)

அம்பிகா said...

//நீ நினைத்தது
என்னிடமிருந்து வந்ததும்
நான் விரும்புவது
உன்னிடமிருந்து பிறக்கும் போதும்
இரசாயன மாற்றதிற்குட்பட்டு
நம்மையும் மாற்றுகின்றன .//
நான் பேச நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்.
அழகான கவிதை பத்மா.

விஜய் said...

மௌனம் பல உண்மைகள் பேசும்

ரொம்ப பிடத்தது

வாழ்த்துக்கள்

விஜய்

பனித்துளி சங்கர் said...

//////////ஒரே வார்த்தையை
இருவரும் எடுக்கும் நேரம்
அது இரட்டிப்பாகாமல்
நம் இருவரிடையகப்பட்டு
கண்சிமிட்டிச் சிரிக்கிறது
///////

மிகவும் என்னை ரசிக்க வைத்த வார்த்தைகள் .அருமை . பகிர்வுக்கு நன்றி

ஸ்ரீராம். said...

அருமை..அருமை...நல்லா எழுதி இருக்கீங்க பத்மா...அந்த வார்த்தைகள் வரும் என்று தெரிந்து ஆனால் இன்னும் வராத நிலையில் அதற்குக் காத்திருக்கும் சுகமான தவிப்பு இருக்கே அது தனிதான்...

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

நல்லாயிருக்குங்க ...

இராஜ ப்ரியன் said...

//உனக்குமெனக்கும்
நடுவேயலைகின்றன
நமக்கான வார்த்தைகள்//
அழகு!!!

கவி அழகன் said...

வாழ்த்துக்கள்

சிவாஜி சங்கர் said...

கண்களால்
கதைக்கிறோம் நாம் :)

ஜெய்லானி said...

கவிதை சூப்பர்.....

சுந்தர்ஜி said...

//நான் பேசநினைப்பதும்
உன் மனதில் வருவதுமான
வார்த்தைகள்
பிரசவிக்கும் சமயமறியாது
வாதயோடலைகின்றன//

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டுமென்ற நிலை உறவின் பூரணத்வம்.உங்கள் மொழி வர வர மிக அருமையாக வசப்படத் துவங்கியிருக்கிறது.வார்த்தைச் சிக்கனமும்-சரியான துவக்கமும் முடிவும் ஒரு கவிதைக்கு அளவில்லா ஆனந்தத்தைத் தருகின்றன.
உங்கள் கவிதையும் அப்படித்தான்.

ஆடுமாடு said...

அருமையான சொல் விளையாட்டு.
இதுவரை எழுதிய கவிதைகளை காட்டிலும் இது சிறப்பாக வந்திருக்கிறது.

தொடர்ந்து எழுதுங்கள். சித்திரமும் கை பழக்கம்!

வாழ்த்துகள் மேடம்.

vasan said...

க‌ண்க‌ளிர‌ண்டும், க‌தைக்க‌த் துவ‌ங்கிய‌பின்
நடுவிலான‌ வார்த்தைக‌ளாலென்ன‌ ப‌ய‌ன்?
வார்த்தைக‌ள் தேடி க‌ண்க‌ளில் காண்டடைவ‌து
அருமைதான்... பின் அருகாமையும்..

அன்பேசிவம் said...

மேடம் எனக்கு அந்த பாட்டு நியாபகம் வந்துடுச்சு... :-)

உயிரோடை said...

கவிதை நல்லா இருக்கு பத்மா

Madumitha said...

வார்த்தைகளுக்கு இடையே
புகுந்து காதல் கண்ணாமூச்சி
ஆடுகிறாது.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

கண்கள் மட்டும் இல்லை என்றால் காதல் என்பதே மானுடத்தில் இல்லாமல் போயிருக்கும்..வெகு அழுத்தமான கவிதையைப் படித்த திருப்தி எனக்கு.

கவி அழகன் said...

கவிதை அருமை

Appu said...

arumaiyana varthai vilayattu :)

பத்மா said...

உண்மை தான் ரிஷபன் .நன்றி

பத்மா said...

வாங்க வானம்பாடிகள் சார் .நன்றி

பத்மா said...

ரொம்ப தேங்க்ஸ் ஹேமா

பத்மா said...

:) நன்றி சரவணா

பத்மா said...

பாலாசி பாராட்டுக்கு நன்றி நண்பர்

பத்மா said...

மிக்க நன்றி
அருணா
கதிர்
அகல் விளக்கு
அஷோக் அண்ணா
சித்ரா மேடம்

பத்மா said...

நான் பேச நினைப்பதை நீ பேசினால் எத்தனை இன்பம்
இல்லையா அம்பிகா ?

பத்மா said...

நன்றி விஜய்
மிக்க நன்றி பனித்துளி ஷங்கர்

பத்மா said...

ஹ்ம்ம் காத்திருத்தல் சுகம் ...
நன்றி ஸ்ரீராம்

பத்மா said...

மிக்க நன்றி நண்டு
ராஜப்ப்ரியன்
யாதவன்
சிவாஜி ஷங்கர் வருகையே பாராட்டு தான்
நன்றி ஜெய்லானி

பத்மா said...

மிக்க நன்றி சுந்தர்ஜி
ஆனந்தமளிப்பது மிக்க சந்தோஷமாஇருக்கு ...
அது என்னையும் அறியாமல் நடக்கிறது என்றறியும் போது அது இன்னும் இரண்டு மடங்காகிறது ...
வாசித்து கருத்தளிதற்க்கு மிக்க நன்றி மீண்டும்

பத்மா said...

ஆடு மாடு சார் ,
முதல் மதிப்பெண் வாங்கிய மாணவி போல பெருமை கொள்ள வைக்கிறது உங்களின் ஊக்க வார்த்தைகள் .
மேலும் முனைவேன் .நன்றி

பத்மா said...

எந்த பாட்டு முரளி?
நிறைய பாட்டு வரப்போகிறது , beware

தினேஷ் ராம் said...

// நிறைய பாட்டு வரப்போகிறது , beware //

:-)

Ahamed irshad said...

நல்லாருக்குங்க பத்மா...

அண்ணாமலை..!! said...

வார்த்தையை வார்த்து வளைத்து
கற்பனையை ஒரு வழி செய்திருக்கிறீர்கள்!

வார்த்தைகள்! இல்ல..இல்ல..வாழ்த்துகள்!

பத்மா said...

ஹ்ம்ம் ஆமாம் வாசன்

பத்மா said...

நன்றி உயிரோடை

பத்மா said...

really? @ மதுமிதா?

பத்மா said...

ரொம்ப மகிழ்ச்சி ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி அவர்களே

பத்மா said...

thanks a lot zeno

uma said...

romba superb padmaja slient langauge made me think the old song nan pasa ninpthala nee pasa vandum

மணிவண்ணன் வெங்கடசுப்பு said...

:) Wow...