Tuesday, March 17, 2020

சகா 11


அந்தஒற்றைக்
காகக் கரைதலின்
ஊடே உன்
காதலை உணர்த்தியிருக்க
வேண்டாம்
பிச்சிப்பூ மலரும்
அந்நான்கு மணி
வெயிலில்
ஆண்டாளாய் ஆனேன்
என்பதை அந்தத் தோளமர்ந்த
காகம் தவிர யாரறியக் கூடும்?
இனி
குயில் பாடும் நேரம் கேட்டு
காதல் பேசு
கிளிக்கெல்லாம் ஆசையில்லை
எனக்கு.

No comments: