Tuesday, March 17, 2020

சகா 2

சகா
====
கூறினால் நிந்தனை
கேலி முகச்சுழிப்பு வரத்தான் போகிறது.
ஓரு இருபது ஆண்டுகள்
மனதை பின்செலுத்தி
பட்டாம் பூச்சி பறக்க வைக்கும்
வித்தை உன் இரு வார்த்தைகளில்
இருப்பதறிவாயா?
வயசியாய் என்று தான் உணர்வது?
இனி மறந்தும் கூட உச்சரித்து விடாதே
பார்ப்போம் என்று.
இயலாதவைகள் இயலாதவைகளாகவே
மரித்து விடட்டும் இச் ஜென்மத்தில்.
நம்பிக்கையை மட்டும் உயிர்பித்து விடாதே!

No comments: