Tuesday, March 17, 2020

சகா 10


மழைக்குளிரில்
நடுங்கிய படி
அமர்த்தலாய் நோக்கும்
அக்காகத்தை இப்பொழுது நடந்து
கடக்க வேண்டும்.
மூன்று மணி வெயிலில்
என் வயிறதிர குரல் எழுப்பும்
அதன் அலகுகளோ
ஒட்டி மூடிகொண்டிருக்கின்றன.
இது போன்ற வேளைகளில்
மழைகூட வெறுக்கப்படுமொன்றாய் மாறிவிடுகிறது.
ஏனெனில்
ஒரு துளி பட்டுச்சிலிர்த்துக்
ஒலிக்கும் அக்காகக்குரல்
அச்சசல்
உன் உச்சக்கூவலைப்போலவே
கேட்கிறது
சொல்!எதாவது சொல்.
ஆனால் அது நீதான் என்று மட்டும்
கூறிவிடாதே!

No comments: