Tuesday, March 17, 2020

சகா 6


வயதாகிவிடும் என்றதுன் அச்சம்
வீணாகிப் போனதால்
ஊசித் தழும்புகள் நிறை
வயிறு தடவாது
போனதுன்கை
வயசி நரை கண்டு நிற்க
உன்னைச் சேரா வயோதிகம்
என் மேல் மட்டும் குவிகிறது.
திரை படர் கண்
நீரற்று காய்கிறது
கிறுக்கி கிறுக்கி கிறுக்கியாகும்
இவளை நோக்கி
உன் பற்களைக் காட்டாதே
நாளையும் வரும் காண்
இப்புலம்பல்
சேர்த்து வை உன் புன்சிரியை
கடனாகக் கூட
வேண்டலாமதை.

No comments: