Tuesday, March 17, 2020

சகா 7


நிலா உடனோடி வரும்
ராஜா இசையை
உண்டு திளைக்கும்
பயணக் கனாவொன்று கண்டேன்.
அவ்வப்போது சிலிர்த்தது
மனதுடலும்.
என் கைத்துளாவலில்
சிக்காமல் போகும் உன் கை காணாது
பதறி எழுகிறேன் நான்
பின்னும் துளாவும் கைகளுக்கு
சிக்கியதா இல்லையா உன் கை
என்பது தெரியாமலே போகட்டும்
அதுவும் ஒரு கனாவென.

No comments: