Tuesday, March 17, 2020

சகா 12

கொன்றும் தின்றும் விடுகிறது
ஒரே ஒரு வார்த்தை.
இந்த நாளை ஆக்கியதும்
இவ்விரவை நீட்டிப்பதும்
ஒரே வார்த்தை.
கொலை செய்யும் கருவியை எய்து
பின் கண்மூடி விட்டால்
,நானென்ன செய்ய?
வேறெங்கு போக?.
மாயாது மாய்ந்து
அச் சொல்
தின்ன விழைகிறேன்.
அச்சம் நீக்கடா நீக்கு.

No comments: