Wednesday, March 10, 2010

என்னவானோம்?

இரண்டு சோம்பிய முதலைகளாய்
வெளி வெறித்து கிடந்தோம்
வந்து வீழ்ந்தது ஒரு துளி மழை
வாலசைக்க  மறுக்கும் பல்லியாய் உள்வாங்கி உறிஞ்சினோம்
பூமியிலிருந்து மேல் நோக்கி காற்று வெஞ்சினமாய் வீசியது
பறந்து வந்த மணல் உடல் மூடி
நிலத்தோடு சேர்த்து அழுத்தியது
அசையும் அம்மணல் மேடு
நம் பெருமூச்சை உணர்த்திக்கொண்டே இருந்தது .
ஒரு பரவச சிறுவேலையில் உன் கண்ணிலிருந்து
புறப்பட்ட அக்னி என் கண் வந்து சேர
ஹுங்காரத்துடன்  மணல் உதறி பஞ்சபூதமும்
நடுங்கி சிதற
பஞ்சபூதமானோம் நாம்

44 comments:

சசிகுமார் said...

நல்ல பதிவு நண்பரே , தொடர்ந்து எழுதி பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Ashok D said...

என்னவானோம்.. பூதமானோம்.. அதானே :)

பத்மா said...

@ அசோக்
அண்ணே வர வர ரொம்ப தான் கிண்டல் :)

Ashok D said...

//அண்ணே வர வர ரொம்ப தான் கிண்டல் :)//

நான் பஞ்சபூதத்தை சொன்னேங்க. சந்தடிசாக்கல அண்ணண்ட்டீங்க பார்த்தீங்களா.. எனக்கு வயசு 26 தாங்க ஆவுது.

மதுரை சரவணன் said...

கவிதை பூதம் . அருமை.

ரசிகன்! said...

ur writing sounds something different :)

Its nice to read!!

romba nalla irukku :)

பத்மா said...

தேங்க்ஸ் சசிகுமார் .அடிக்கடி வந்து படிங்க ப்ளீஸ்

பத்மா said...

நன்றி சரவணன்

பத்மா said...

hi chitra :))::))

பத்மா said...

hi rasigan ,
thanks for ur visit ,happy it appeals to u .keep reading plz

பத்மா said...

அசோக் எனக்கு 62 தான் .போனா போது எல்லா ஆண்களும் எனக்கு அண்ணன் தான் மதுரை சொல்லித்தந்தது இது :))

உயிரோடை said...

க‌விதை ந‌ன்று

அன்பேசிவம் said...

நல்லா இருக்குங்க, கவிதை. தொடர்ந்து எழுதுங்க

Anonymous said...

பத்து வரிகளில் பஞ்சபூதங்களை கையாண்ட விதம் அழகு...

பத்மா said...

தமிழ் அது தானே அமைஞ்சதுன்னு சொன்னா ஓவரா இருக்குமோ? நானே பஞ்சபூதம் என்ற வார்த்தைய எழுதிய பின் தான் கவனித்தேன் .நீங்களும் கவனித்ததிற்கு நன்றி

பத்மா said...

முரளி ,
எப்போதும் போல வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .
it makes me proud to see someone reads my verses regularly
thanks

பத்மா said...

லாவண்யா ,
மிக்க நன்றி
i value ur opinion

முகுந்த்; Amma said...

Ippo thanga unga blogkku varein. Romba nalla kavithai eluthureinga neenga. Nalla pathivu.

பத்மா said...

முகுந்தம்மா, ஒங்கள போலவே நானும் ப்ளாகோமேனியால அகப்பட்டு கஷ்டப்படறேன் .வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Priya said...

mm....good one!

புலவன் புலிகேசி said...

நன்று...

க.பாலாசி said...

நல்ல கவிதை... ரசித்தேன்... தொடர்ந்து எழுதுங்கள்....

ஜெனோவா said...

enakku mikap piditthirunthathu padma.. thodarnthu enluthunkal.

sorry for not using Tamil fonts.

valthukal

vidivelli said...

நல்லாயிருக்குங்க.........

வசதியிருந்தால் நம்ம பக்கமும் வரலாம்தானே..........

வினோத் கெளதம் said...

அழகா எழுதியிருக்கிங்க..

"உழவன்" "Uzhavan" said...

கவிதை ரசனையாக உள்ளது. வாழ்த்துகள்

தமிழ் அஞ்சல் said...

:-)

Roy Cherian Cherukarayil said...

நல்ல பதிவு ....என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

பத்மா said...

thank u priya

பத்மா said...

நன்றி புலவர்

பத்மா said...

ஜெனோவா மிக்க நன்றி

பத்மா said...

விடிவெள்ளி வாங்க .வருகைக்கு நன்றி நிச்சயமா உங்கள் பக்கம் வரேன் .

பத்மா said...

நன்றி வினோத் .முதல் வருகைக்கும் கருத்துக்கும்

பத்மா said...

ஹ்ம்ம் கிளி வாங்கியாச்சா உழவன் ? கருத்துக்கு நன்றி

பத்மா said...

திருப்பூராரே வாங்க .நன்றி

பத்மா said...

நன்றி செர்ரி

அம்பிகா said...

\\பஞ்சபூதமும்
நடுங்கி சிதற
பஞ்சபூதமானோம் நாம் \\
நல்லா இருக்குங்க.

Dubukku said...

கவிதை நம்பள்கீ கொஞ்சம் தூரம் ஆனாலும் நல்லா இருக்குதூ..

உங்க ப்ரொபைல் படம் ரொம்ப அருமைங்க...அந்த ஓவியம் ரொம்ப பிடிச்சது

R.Gopi said...

ஓஹோ...

இது தான் நாம் பஞ்சபூதம் ஆன கதையா??

நல்லா இருக்கு...

ரிஷபன் said...

பஞ்ச பூதங்களையும் கையாண்ட விதம் க்ரேட்!

அமர பாரதி said...

எனக்குப் பின்னூட்டம் இட்டதற்கு நன்றி பத்மா. கவிதை நன்றாக இருந்தது.

Ravindran Arunachalam said...

பிரபஞ்சத்தின் இயக்கத்தை நீங்கள் உணர்த்துவதாக கருதுகிறேன். சரிதானா பத்மா ? ரொம்ப நல்ல கவிதை .. மேலும் மேலும் எழுதுங்கள்

பத்மா said...

அம்பிகா ,டுபுக்கு ,கோபி ,ரிஷபன், அமரபாரதி அண்ட் இரவின் அனைவருக்கும் ரொம்ப நன்றி

bogan said...

உன் கண்ணிலிருந்து புறப்பட்ட அக்னி!கிரேட்.