Monday, March 12, 2012

என்னவனோம் (மீள் பதிவு)

இரண்டு சோம்பிய முதலைகளாய்
வெளி வெறித்து கிடந்தோம்
வந்து வீழ்ந்தது ஒரு துளி மழை
வாலசைக்க  மறுக்கும் பல்லியாய் உள்வாங்கி உறிஞ்சினோம்
பூமியிலிருந்து மேல் நோக்கி காற்று வெஞ்சினமாய் வீசியது
பறந்து வந்த மணல் உடல் மூடி
நிலத்தோடு சேர்த்து அழுத்தியது
அசையும் அம்மணல் மேடு
நம் பெருமூச்சை உணர்த்திக்கொண்டே இருந்தது .
ஒரு பரவச சிறுவேலையில் உன் கண்ணிலிருந்து
புறப்பட்ட அக்னி என் கண் வந்து சேர
ஹுங்காரத்துடன்  மணல் உதறி பஞ்சபூதமும்
நடுங்கி சிதற
பஞ்சபூதமானோம் நாம் 

3 comments:

ரிஷபன் said...

பஞ்சபூதமும்
நடுங்கி சிதற
பஞ்சபூதமானோம் நாம்

சபாஷ்!

கீதமஞ்சரி said...

தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_13.html

SURYAJEEVA said...

வாலசைக்க மறுக்கும் பல்லியா? புரியல தோழர்