Thursday, March 1, 2012

சலன நதி

ஒரு நதியாக ஓடுகிறது
காலம்
வாழ்வு
நேரம்
விதி
பயணிக்கும் இந்நேரமே நம்முடையதாக 
அசராது செல்லும்
அவ்வற்றாத ஆறில்
நம் தாத்தனும்
சென்றிருப்பான் ஒரு  நாள் .
இக்கணம்
செலுத்தப்படுபவராக
நான்
நீ
மற்றும் நாமெல்லோரும்
எக்கணமும்
அதிலில்லா சாத்தியத்தில் 
ஒரு சலனமாவது
உருவாக்க முயன்று
பின் 
காணாமல் போவோம் வா

4 comments:

சத்ரியன் said...

அழகிய கவிதை.

பத்மா said...
This comment has been removed by the author.
Anonymous said...

kp my take on salana nathi

ஒரு நதியாக
ஓடுகிறது காலம்
சிறு அலைகளின் மடிப்பில்
சுருண்டு விரிகிறது வாழ்க்கை
இந்த தருணமே
நிச்சயமானதாக இருக்கும் போது
ஒரு கல்லேனும் எறிவோம் வா
சில கணங்களுக்காவது
எதிர்சலனம்
இல்லாமலா போகும்

v s sasikumar

priyamudanprabu said...

nice