Friday, June 25, 2010

காகிதக் கப்பலாய் மாறிய நான்

காகிதக்  கப்பல்கள் நிறைந்து பிதுங்கும்
அறையில் நசுங்கியபடி நான் .

ஒரு துளி மழை போதும்
அவை உதறிஓடத் துவங்கிவிடும் 

ஓடும் அவைகளை இறுக்கப் பிடித்து
கட்டிக் காப்பதிலே என் இரவு கழிகிறது

கனன்று  சிவந்த விழிகளுடன் கண்விழிக்கையில்
அவை மேலுமெனை வஞ்சத்துடன் அழுத்துகின்றன

அடை மழைக்கு காத்திருக்க கதறுமென்னை 
வெறுப்புடன் நோக்கி மிதக்கத் துடிக்கின்றன

ஒரு மழைக்காய் காத்திருக்கும் நாளில்,பெரும் புழுதியை காற்று சுழல
கப்பல்கள் யாவும் இறக்கைகள் வளர்த்தன

வீதி வழி பின் நிரம்பப் போகும் நீரில் மிதக்க விட யாதொன்றும் இல்லாமற்போக
சிறிது சிறிதாய் கப்பலாய் மாறத் துவங்கினேன்  நான் 

18 comments:

க ரா said...

நல்லா இருக்குங்க.

பனித்துளி சங்கர் said...

///ஒரு துளி மழை போதும்
அவை உதறிஓடத் துவங்கிவிடும்

ஓடும் அவைகளை இறுக்கப் பிடித்து
கட்டிக் காப்பதிலே என் இரவு கழிகிறது////////

வார்த்தைகள் ஒவ்வொன்றும் இதயத்தை இறுக்கி பிடித்துகொள்கிறது , மிகவும் அருமையான கவிதை . பகிர்வுக்கு நன்றி

Riyas said...

அழகாக எழுதியிருக்கிங்க

ஹேமா said...

எதிர்பார்த்தது இல்லாமல் போகும் காலத்தில நாமே அதுவாய் மாறிக்கொள்கிறோம்.சரியா பத்மா !

Chitra said...

very nice. :-)

Madumitha said...

அனைவரும் தங்களை
பொருத்திப் பார்த்துக்கொள்ள
வசதியான கவிதை .
மிக நன்று பத்மா.

adhiran said...

best one padma.

Katz said...

அருமை

VELU.G said...

//வீதி வழி பின் நிரம்பப் போகும் நீரில் மிதக்க விட யாதொன்றும் இல்லாமற்போக
சிறிது சிறிதாய் கப்பலாய் மாறத் துவங்கினேன் நான்
//

மிகவும் அருமை

சுந்தர்ஜி said...

இத்தனை நாள் இடைவெளி? எத்தனை அழகான கவிதை?ஏன் இத்தனை காகிதக் கப்பல்கள் செய்துவைத்தீர்கள் பத்மா?மழை ரொம்ப ஜாஸ்தியோ?

//அடை மழைக்கு காத்திருக்க கதறுமென்னை
வெறுப்புடன் நோக்கி மிதக்கத் துடிக்கின்றன//

//வீதி வழி பின் நிரம்பப் போகும் நீரில் மிதக்க விட யாதொன்றும் இல்லாமற்போக
சிறிது சிறிதாய் கப்பலாய் மாறத் துவங்கினேன் நான்//

க்ளாஸ் வரிகள்.அருமையான வடிவம்.சபாஷ் பத்மா.

r.v.saravanan said...

ஒரு மழைக்காய் காத்திருக்கும் நாளில்,பெரும் புழுதியை காற்று சுழல
கப்பல்கள் யாவும் இறக்கைகள் வளர்த்தன

மிதக்க விட யாதொன்றும் இல்லாமற்போக
சிறிது சிறிதாய் கப்பலாய் மாறத் துவங்கினேன் நான்

good


நல்லா இருக்கு பத்மா

ரிஷபன் said...

அருமையான கப்பல்.. இல்ல.. கவிதை..

உயிரோடை said...

கவிதை நல்லா இருக்கு பத்மா.

Vediyappan M said...

"வீதி வழி பின் நிரம்பப் போகும் நீரில் மிதக்க விட யாதொன்றும் இல்லாமற்போக
சிறிது சிறிதாய் கப்பலாய் மாறத் துவங்கினேன் நான் "

மிக கவித்துவமான வரிகள்

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

கவிதை அருமை!!

Ashok D said...

//கப்பல்கள் யாவும் இறக்கைகள் வளர்த்தன//

அப்புறம் ஏன் பறக்கல?

கடைசி இரண்டு பத்தியில் பாரம் உணர்ந்தேன்...

நன்று பத்மா :)

vinu said...

ingu namathu azugaiyaikooda suthanthiramaga aza mudivathillai sari thaanea thozi

bogan said...

உங்கள் மாஸ்டர்பீஸ் இதுவாய்த் தான் இருக்கும் எனக்குத் தோன்றுகிறது.மிகையும் குறையும் இல்லாத கவிதை.அற்புதம்.நல்ல கவிதை என்பது சட்டென்று புன்னகைக்கவோ திடுக்கிடவைக்கவோ செய்யவேண்டும்.அதை இந்தக் கவிதை சரியாய்ச் செய்கிறது.