Monday, April 2, 2012

தொலைந்த போன பிரப்பமர பொந்து(இன்று அதீதத்தில் வெளிவந்துள்ளது )


எங்கள் தெருமுனை பிரப்ப மரத்தில் 
மூன்று பேர் நிற்கக்கூடிய  
பொந்த்தொன்றிருந்தது.

பங்குனிக் காவடி
பார்த்து ரசிக்க
அதிலேறி ஒளிவோம் .

இரவு எலெக்ட்ரிக் காவடி
வரும் போது மட்டும்
மரம் பொக்கைவாயில் சிரிப்பது போலிருக்கும்

அகாலம் வீடு திரும்பும்
எனக்காக
காத்திருக்கும்
அம்மாவிற்குத்  துணையாய்
மென் குரலில் சிலுசிலுக்கும் .

மரத்தடி மலர் காதலுக்கெல்லாம்
ஆசிர்வாதமாய்
இலை சொரியும்.

என் மகள் அதன் நிழலில்
களிக்க போட்ட கனவெல்லாம்
கலைய
புயல் காற்றில் மயங்கி சரிந்தது
அம்மரத்தாத்தன்

இன்று பங்குனி காவடி
பார்க்கும் ஆசை
மகளுக்குமில்லை
ஏறி நிற்க
அந்தப்  பொந்துமில்லை

1 comment:

newton painters chennai said...

பிரப்ப மரம் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் ....