Wednesday, August 22, 2012

நாய்க் கனவு

ஓர் அபூர்வமான
மார்கழி மழைநாளில்
வீட்டில் சரணடைந்தது
கருப்பு நாய்க் குட்டி ஒன்று .
பறந்து பறந்து
கொட்டங்கச்சி  பால் அருந்தி
தள்ளாடும் நடை மயக்க
நானறியாமல் அதன் தோழியானேன் .
அதற்கென ஒரு  கிண்ணம்
படுக்க ஒரு விரிப்பு
என பழக்கியும்
பல நாட்கள்
என் கூந்தல் கதகதப்பில்
கண்ணுறங்கும் .
குழந்தையென
ஊஞ்சலாட்டி தூங்கியபின்
அதன் முகம் பார்த்து
வினாவொன்று எழும்
என்றாவது
எப்போதாவது
அதன் கனவில்
நான் வருவேனா?


(நன்றி பூவரசி இதழ் )

6 comments:

ராம்ஜி_யாஹூ said...

அருமை

விசில் பட விவேக்கைக் கூப்பிட்டால் அறிந்து கொள்ளலாம்

SAI said...

kanavugal udaintha manorathangal... naam eduvaaga irukkiromo aduvaagavey aagippogirom. nitchayam kanavil varalam

சசிகலா said...

கண்டிப்பாக வருவீர்கள். அழகு வரிகளில் தெரிகிறது.

ஹேமா (HVL) said...

//என்றாவது
எப்போதாவது
அதன் கனவில்
நான் வருவேனா?//

எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குங்க.

சிவகுமாரன் said...

அருமை.
இந்தக் கவிதையில் வரும் ஒரு வரி ஆச்சர்யப்பட வைத்தது.
இதே போல் ஒரு வரி என் கவிதையிலும்.

மோகன்ஜி said...

முத்தாய்ப்பான வரிகள் அழகானவை பத்மா!