Sunday, April 15, 2012

காலோவியம்

சிறிது மூடியிருந்த 
கதவின் இடையில் 
தெரிந்த 
உன் பாதங்களுகேற்ற 
முகத்தை 
நான் மனதில் 
வரைந்து விட்டேன் .

வரைந்த அது 
சிதையப் போகிறது 
தயவு செய்து 
என் கண்படாமல் போ நீ ! 

1 comment:

ஹ ர ணி said...

இதுதாங்க கவிதையின் ரசனை...இப்படித்தான் கவிதை மனம் துள்ளும்... அருமை..

போதும். ஒரு முழுமையான கவிதை படித்த நிறைவு.

நிறைய பதிவுகள் போய்விட்டு வருகிறேன்.. ஒன்றுமட்டுமே தோணுகிறது..

இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமோ.. என்று மனது பாடுகிறது.