Monday, April 6, 2015

விலக்கு தோஷம்


சாய்த்து காலி செய்யப்படும்
அத்தனை குப்பைத் தொட்டிகளிலும்
நிறைந்து கிடக்கிறன
குருதி படிந்த பஞ்சுப் பொதிகள்.
விலக்கான பெண்களை
நாய்கள் துரத்துமென்றும்
பறவைகளின் நிழல்
தீட்டுத்துணியில் பட்டால்
பட்சி தோஷமென்றும்
அம்மா கூறுவாள்.
உடுத்த மாற்று இல்லா
சாலையோர தோழிகளின்,
பலமுறை உபயோகித்து,
சாக்காய் விடைத்து
தொடையெல்லாம் ரணமாக்கி
நடை மாற்றும்
அச்சுருணையில்
எந்த தோஷம் ஏறக்கூடும்?
பெண்ணாய் பிறக்க நேர்ந்ததோர்
பாவத்தைத் தவிர?

2 comments:

முகுந்த்; Amma said...

Amazing...:)

Unknown said...

very striking poem
after reading this poem i had to close my eyes and pray for a while.... great poem