Wednesday, September 4, 2013

இரண்டு சீனக் கவிதைகள்



இன்றைய சீனக் கவிதைகளுக்கு ஒரு திறவுகோல் என அறியப்படுபவர் ஹுயு ஷீ (HU SHI ) 1891-1962.


கனவும் கவிதையும்


சாதாரண அனுபவங்கள் தாம் அனைத்தும்
பிம்பங்கள் கூடசாதாரணவை தாம்
மிகவும் எதேச்சையாய் அவை கனவுகளில் மலர்கின்றன
பின் ஒரு புதுவுரு அடைகின்றன
சாதாரண உணர்வுகள் தாம் அனைத்தும்
வார்த்தைகள் கூட சாதாரணவை தாம்
எதேச்சையாய் அவை கவிஞனை அடைந்து
முடிவுறா புதுக் கவிதையாய் மலர்கின்றன.
மதுவின் வீரியம் அது தரும் போதையில்
காதலின் பலம் அதன் தோல்வியில்
என் கவிதையை நீ எழுத முடியாதது போல
உன் கனவை நான் காண இயலாது .
--------------------------------------------------------------------------------------------------------------------------------



பழைய கனவு


பச்சை இலைகளுக்கூடே
ஒரு பறக்கும் கூரை வெளிப்படுகிறது
ஒரு பழைய கனவை அது எழுப்பி
என்னுள் கண்ணீரை துளிரச் செய்கிறது .
ஏனெனில் நான் பாடுவது
யாருமே அறியா இசையில்
பழைய பாடல்களைத்தான்
ஓ !நான் உண்மையில் பாடுவதெல்லாம் இல்லை
ஒரு பழைய கனவில் தான்
வசித்துக் கொண்டிருக்கிறேன் .....

No comments: