Sunday, August 18, 2013

இந்த மரத்தில் மட்டுமே கிளிகள் குடியேறுகின்றன

அதுவாகத்தான் அமைகிறது
அசைந்தழைப்பதில்லை எப்போதும்
இலைகள் கூட அங்கங்குதான்
பெரிதாக சுகந்தம் கூட பரவுவதில்லை
எப்போதோ பூக்கும் பூக்கள்
எப்போதாவது தான் காயாகி
விலகாமல் காற்றிலசைகின்றன
வெட்டப் பட்ட கிளைகள் மட்டும்
எப்படியோ உடன் வளர்ந்து விடுகின்றன
ஊழிக் காற்று  எத்துணை அசைத்தும்
சிறு சலனம் கூட காண்பதில்லை வேர்கள்
பூவும் மணமும் புகழும் சுற்றுதலும் இல்லாதிருப்பினும்
விதி கூட இதனை விலக்கி வைத்திருப்பினும்
இந்த மரத்தில் மட்டுமே கிளிகள் குடியேறுகின்றன
கூடிக் கூவிக் களிக்கின்றன .
என்ன !
உயரப் பறக்கும் பருந்திற்கு மட்டும்
இதனகம் கண்ணில் படுவதில்லை .