Thursday, February 18, 2010

சிறுமியானேன் !


உன்னை முதல் முதலாய் பார்த்த போது
எச்சில் பறக்க விசிலடித்து
இல்லாத பேருந்தை ஓட்டிய சிறுவனின் பயணியாய்
சீட்டு வாங்கிக்கொண்டு இருந்தாய்
இறங்குமிடம் வந்ததும்
அந்த ஓட்டுனர் மல்யுத்த வீரனாக
அவனிடம் அடி வாங்கி தோற்றுபோய்
கைகால் வான் நோக்கி
விட்டுவிட கதறியபடி இருந்தாய்
இந்த விளையாட்டுக்கெல்லாம் வராத
எனக்குமட்டும்
எப்படி ஒரு பரிசாய் அந்த புன்னகையைத் தந்தாய்?
இப்போது நானும்
இல்லாத இராட்டினத்தில்..
சுற்றும் ஒரு சிறுமியாய் !

28 comments:

தேவன் மாயம் said...

ஆகா!!ராட்டினச்சிறுமியா? நல்ல கற்பனை!!

மதுரை சரவணன் said...

nallathu sirumi thaan paal manam maaraatha anbudan iruppaal. karpanai valamai. vaalththukkal

sigamani said...

naanum siruvananeen ungal kavithai padithu very nice

கமலேஷ் said...

ரொம்ப நல்ல இருக்குங்க...வாழ்த்துக்கள்..

இராஜ ப்ரியன் said...

நன்று

டவுசர் பாண்டி said...

//இல்லாத இராட்டினத்தில்.. சுற்றும் சிறுமியாய் !//

சூப்பர் !! வார்த்த பிரயோகம் , இன்னா மேரி ரோசன பண்றீங்கோ !! நல்லா கீது.

பத்மா said...

நன்றி தேவன் மாயம்

பத்மா said...

thank u madurai saravanan

பத்மா said...

thanks sigamani

பத்மா said...

mr ashok thanks for the smile :)

பத்மா said...

நன்றி கமலேஷ்

பத்மா said...

டவுசர் பாண்டி சொன்னபடியே எல்லா கவிதையும் படிக்கிறீங்க ரொம்ப நன்றி ,வார்த்தை பிரயோகம்லாம் பெரிய வார்த்தை .எதோ ...

பத்மா said...

நன்றி ராஜப்ரியன்

Jerry Eshananda said...

padma,you have a surprise. go and watch valaiccharam.

பா.ராஜாராம் said...

:-)

ஒரு தொடர் விளையாட்டிற்கு அழைத்திருக்கிறேன் மக்கா.நேரம் இருக்கும் போது தளம் வாங்களேன்.

Prabu M said...

so sweet...
Your words created waves inside me...

:)

அன்பேசிவம் said...

கருவேலநிழலடியில் உங்களை பார்த்தேன். அறிமுகம் அங்கேதான்.

நல்லா எழுதுறிங்க, தோழி. வாழ்த்துக்கள்

தமிழ் உதயம் said...

படம் அருமை. பால்ய ஞாபகத்தில் மற்றொரு கவிதை. பால்ய ஞாபகங்கள் நல்லா இல்லாமல் போகுமா.

தமிழ் said...

அருமை

குழந்தையாக இருந்தாலே
நன்றாக இருக்கும் போலே

அரசூரான் said...

இன்று உங்கள் கவிதைகள் சிலவற்றை படித்தேன்... எளிமையான கவிதை நடை... ஐயகோ அருமை.

பத்மா said...

It was indeed a surprise Jerry thanks a lot .. am touched

பத்மா said...

நிச்சயம் பா ரா சார்

பத்மா said...

thanks Prabhu am honoured

பத்மா said...

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி முரளி

பத்மா said...

தமிழ் உதயம் மிக்க நன்றி .அடிக்கடி தங்கள் கருத்துகளை கூறுங்கள்

பத்மா said...

ஆமாம் திகழ் ..மழலையாய் மாற ஆசை தான்

பத்மா said...

நன்றி அரசூரான் ..வருகைக்கும் கருத்துக்கும் ..

தினேஷ் ராம் said...

நான் ஏன் வளர்ந்தேன்?