Tuesday, October 30, 2007

போடா!

இன்று கொஞ்சம்
அதட்டித்தான்
சொல்லிவிட்டேன்!!
வேலையின் இடையே..
கணிணித்திரையினூடே....
வாசிக்கும் வரிகளின் நடுவே..
இடையறாது........
தலையெடுத்துச் சீறும்
பாம்பென வரும்
உன் ஞாபக எண்ணங்களை
கொஞ்சம் அதட்டத்தான்
செய்தேன்.......
அதற்காக
வண்ண்ங்களிலும்,
வாசனைகளிலும்,
சிரிப்போசையிலும்,
பாடல் வரிகளிலும்
மண்வாசனையிலும்.......
வந்து..
பத்துத் தலை நாகமென
எனைச் சூழ்ந்து
பாடாய் படுத்தாதே......
போடா.......

2 comments:

மே. இசக்கிமுத்து said...

மனதுக்கு பிடித்தவர்களின் நினைவுகளை என்ன இருந்தாலும் அப்படி அதட்டியிருக்க கூடாது. அதற்கான தண்டனைதான்...

மே. இசக்கிமுத்து said...

மனதுக்கு பிடித்தவர்களின் நினைவுகளை என்ன இருந்தாலும் அப்படி அதட்டியிருக்க கூடாது. அதற்கான தண்டனைதான்...