Tuesday, October 30, 2007

ஏனடா?

வேலைக்காரியின் முனகல்,
ஆட்டோக்காரரின் அவசரம்,
காய்கறிக்காரரின் ஏமாற்று,
அலுவலகச் சிப்பந்திகளின் சோம்பல்,
அதிகாரிகளின் மேம்போக்கு,
வாடிக்கையாளர்களின் புகார்,
உடன் பிறந்தோரின் குறைகள்,
சில நண்பர்களின் கேலிகள்,
இவை அனைத்தையும்...
புன்னகையொடு தாங்கும்
எனக்கு...
உன் பரிவுக்குரலின்
சிறு மாற்றம் கூட
உயிரில் பூகம்பத்தை
உண்டாக்குதே
ஏனடா?

1 comment:

மே. இசக்கிமுத்து said...

பதில் ஏதும் தெரிந்ததா? கவிதை அருமை!!