Sunday, October 14, 2007

கனா!

ஒவ்வொரு காலையும்
என் கனவினைக்
காயவைக்கிறேன்

கைக் கொள்ளாக் கனவுகள்
கட்டடங்காமல்
ஆட்டம் போடும்!

கனவுகள்
கனவாய் போகாமல்
நனவாய் மாற
நாளெல்லாம்
களைக்கிறேன்!

எனினும்
உறக்கத்திலும்
விழிப்பிலும்
கனவுகளின்
கொட்டம்!

கடை உறக்கம் வரை
கனவு
கனவாய்
இருப்பினும்
கடையோரப் புன்னகையுடன்
உறங்குவேன்....
வானம் வரை
உயரும்
கனவுடன்!!

2 comments:

யாழ்_அகத்தியன் said...

ம்ம்.. வாழ்த்துக்கள்
எழுதுங்கள் எழுதிகிட்டே இருங்கள்

நீங்கள் எழுதுவதால் இறப்பது உங்கள்
பேனாவாக இருகட்டும் வாழ்வது உங்க
எழுத்தாக இருக்கட்டும்

மே. இசக்கிமுத்து said...

வானம் வரை
உயரும்
கனவுகள் கைகூடி புன்னகைகள் பூக்கட்டும்!! வாழ்த்துக்கள் சகோதரி!!