Thursday, October 11, 2007

கண்ணா!!


கண்ணனைக் கருத்தில் கொண்டு
காண
காட்டாமணக்கில் கூட
மல்லிகை வாசம்!

கண்ணனைக் கனவில் கண்டு
பாட
கொல்லை புறம் கூட
கோகுல மாடம்!

கண்ணனை மனச்சிறையில்
பூட்ட
போகும் இடமெல்லாம்
புகழ் பொன்னாரம்!

கண்ணனே வாழ்வெனக்
கொள்ள
இருக்கும் காலமெலாம்
களிக்கும் மனம்!!

3 comments:

மே. இசக்கிமுத்து said...

தீராத விளையாட்டு பிள்ளையை மனதில் நினைத்துவிட்டால் மனமெங்கும் மகிழச்சிதானே!!

ராதா செந்தில் said...

படிக்கும்போதே மனம் குதூகளிக்கிறது.

ராதா செந்தில் said...

படிக்கும்போதே மனம் குதூகளிக்கிறது.