Friday, September 14, 2007

வலி

வலி பெற்ற மொட்டு
பூவாய் மலரும்
உளி கொடுத்த வலியில்
சிலையும் சிரிக்கும்
வலி இல்லா வாழ்க்கை
வையத்தில் இல்லை
கலி என்றில்லை இது
காலத்தின் உண்மை

மனதின் வலியில்
மனது மலருமா?
பிரிவின் வலியில்
உறவு தொடருமா?
தனிமை வலியில்
இனிமை வருமா?
மரண வலிதனில்
ஜனனம் பிறக்குமா?

வலியின் விளைவு
வல்லதே ஆனாலும்
வலியே வாழ்வானால்
வாழ்வதெங்கணம்???
வலிக்கு வல்லமை
தந்த இறைவனவன்
வலி தாங்கும் இதயம்
மட்டும் தர மறந்ததேன்??

வலிக்கு வாழ்க்கைப் பட்ட
நிழல் தேடும் நெஞ்சங்கள்
வலிந்து வரும் துயரதை
வாழ்நெறி என உணருமோ ?
இல்லை வலியுணரா மரணம்
வரக் காத்திருக்குமோ??

வலிக்கு வலி வரும் நேரம்
இறைவனும் உணர்வானா அதை?
வழிந்தோடும் கண்ணீர் மாற்ற
விரைந்தோடி வருவானா ?நினை!

3 comments:

மே. இசக்கிமுத்து said...

//மனதின் வலியில்
மனது மலருமா?
தனிமை வலியில்
இனிமை வருமா?
//

நெஞ்சை தொட்டுவிட்டது இந்த வரிகள்.நிதர்சனமான உண்மைகள்..

மங்களூர் சிவா said...

//
வலியின் விளைவு
வல்லதே ஆனாலும்
வலியே வாழ்வானால்
வாழ்வதெங்கணம்???
//
எதாவது சொல்லனும்னு தோனுது ஆனா என்ன சொல்றதுனு தெரியல

kuthubg said...

வலியின் விளைவு
வல்லதே ஆனாலும்
வலியே வாழ்வானால்
வாழ்வதெங்கணம்???
வலிக்கு வல்லமை
தந்த இறைவனவன்
வலி தாங்கும் இதயம்
மட்டும் தர மறந்ததேன்??


eantha oru aanmaavaiyum
iraivan athan sakkthikku meeri
sothippathillai
vali tharaum iraivan
vali thaangum vallamaiyum
thanthe manithanai anuppuhiraan
manithaa antha vallamai
unnidam irukku athai nee maravathe