Saturday, September 1, 2007

இன்று

அன்று!
கண்ணிலே கனவு!
மங்கலாய் மனவெளியில்;
கனவெனினும்,
ஆழ் மன பெட்டகத்தில்
பூட்டிய நினைவு!
காலசுழற்சியில்
கனவுகள்! கனவுகள்!
ஆசைகளின் கூப்பாடுகள்!
நிதர்சனம் உரைத்தது
கனவு கனவுதானென்று!
நடைமுறை முரண்கள்
கனவினை கொல்லும்!
கல்லறைக் கனவுகள்
எனக் கற்றுத்தெளியும் நேரம்
சட்டென ஒரு கனவுப் பூ!
மனமெல்லாம் பூ வாசம்!
மூடிய கதவின்
மறுபக்கம்
நிலவொளியாய்
சிறு ஜன்னல்!
நனவாகும் கனவின்
வாயிற்படியில் நான்!!!

3 comments:

மே. இசக்கிமுத்து said...

நல்லதாய் வந்த கனவு நிச்சயம் நனவாகும்!

Anonymous said...

கனவுக்குள் கனவு .. வாழ்க்கை என்னும் பெரிய கனவுக்குள், கனவுகள் பல.. !!!

மங்களூர் சிவா said...

//
கண்ணிலே கனவு!
மங்கலாய் மனவெளியில்;
//
டாக்டரை பாக்கனுமோ?
//
நனவாகும் கனவின்
வாயிற்படியில் நான்!!!
//
நனவாகட்டும்