Wednesday, August 20, 2014

சின்ட்ரெல்லாக் கனவுகள்


ஒத்தைசெருப்பும்
பரங்கிப்பழமும்
மட்டுமல்ல
கந்தலாடை ஒதுக்கி
மனம் நோக்கும்
இளவரசனும்
உண்டு படக்கதையில்.
இருந்தும் ஏனோ
இன்னும் ஆயிரம் பேர்
கையில் பிய்ந்த செருப்பை
ஏந்திக்கொண்டு
கண்ணில்
சின்ட்ரெல்லாக் கனவுகளுடன்.
பாவம் அவர்கள்
அறிவதில்லை
தேவதைக் கதைகள்
தேவதைகளுக்கு மட்டுமே
என !

2 comments:

'பரிவை' சே.குமார் said...

அருமை....

தேவதைக் கதைகள்
தேவதைகளுக்கு மட்டுமே....

அருமையான வரிகள்.

Prabu M said...

தேவதைக் கதைகள் தேவதைகளுக்கு மட்டுமே!

எக்ஸெலண்ட்...... அழகான யதார்த்தம்..... நிறைய எழுதுங்களேன்.... :)