Monday, July 22, 2013

முத்தப் புன்னகை

எதையும் எடுத்துக் கொள் என
கைதூக்கி சரணடைந்து விட்டாய்
 

ஆனால் உன் புன்னகையைத் தவிர
வேறு ஏதும் வேண்டுமாயிருக்கவில்லை

உனக்குத் தெரியாமல் ஒரு சிறுசுளை புன்னகையை என் கைக்குட்டையில் திருடிக் கொண்டு வந்து விட்டேன்.

சிறிது நேரம் ஓய்வெடுக்கட்டும் என மேனியில் இளைப்பாற விட்டது ஏனோ தவறாகிப் போனது

என் உதடடைந்து ஒரு முத்தம் பறித்து என்னை கிச்சுகிச்சு மூட்டத் தொடங்கி

உடலெங்கும் புன்னகை மலர தொடங்கிவிட்டது.

போதும்!


உன்னுடையதை நீயே வைத்துக் கொள்

இல்லை உடல்மலர்ந்தவைகளையாவது உடனே கொய்து விடு

சாந்தியடையட்டும் நான்

1 comment:

N Suresh said...

சரணடைந்தவனின்
புனிதம் அவனின்
அன்பு!

உண்மை நேசிப்பை
நிராகரிக்கலாகது...

அருமையான பதிவு. நல்வாழ்த்துக்கள்...

அன்புடன் என் சுரேஷ்