Monday, June 10, 2013

புத்தனாதல்


நண்ப!
கையில் ஒரு கோப்பையை
திணித்து விட்டு
புத்தனாகு  என்றபடி
மாயமாகிப் போனாய் நீ ,
கோப்பை ததும்பி
மது சிதற
பரவுமிடமெல்லாம்
புத்தன் சிரிக்கத் துவங்கினான்
அப்போது அவனைக் கொல்வது
அத்துணை இலகுவாய் இல்லை
புத்தனைக் கொல்லுதல்
அல்லது கோப்பையை
இடம் மாற்றுதல்
எது ஒன்றை செய்தால்
புத்தனாவேன்
என்றோசித்தபடி
சுட்டு விரல் மதுவை
சுவைக்கத் துவங்கினேன்
உடைந்தது கோப்பை !

No comments: