Friday, December 30, 2011

விதைக்குள் ஓர் இசை

ஒவ்வொரு விதையிலும்
ஒளிந்திருக்கிறது
பிறப்பிற்கானதோர் இசை
மழையின் தாலாட்டில்
கண்ணுறங்கும் அது
ஒரு இடியோசையில்
வெடித்து பொழியத் துவங்குகிறது .
பின் பிரபஞ்சத்தின் பாடலாய்
விண் மண் வியாபிக்கிறது
வ்யாபிகின்ற அக்கானகத்தின்
ஒவ்வொரு விதையிலும்
ஒளிந்திருக்கிறது
இறப்பிற்கான
ஓர் இசையும் கூட .


(கல்கியில் வெளியான கவிதை)