Sunday, November 7, 2010

என் அருமை காதலிக்கு வெண்ணிலாவே

நிலவு தராத மயக்கம் உண்டா?
அதுவும் முழு நிலவில் தன் காதலியின் முகத்தைக் கண்டு பாடும் காதலன் எத்தனை உன்மத்தனாக மாறி இருக்க வேண்டும்..?
வெண்ணிலாவிடம் போய் "நான் கெஞ்சினால் அவள் தர மாட்டாள் ,நீயாகவே வாங்கிகொள் ,இதும் அவள் சொல்லிக்கொடுத்தது தான் என பிதற்றும் காதலனை நாம் ரசிக்காமல் இருக்க முடியுமா ?
T M S இன் குரலில் இந்த அழகிய பாடல் ..
கேட்க கேட்க சலிக்காமல் .....

16 comments:

அம்பிகா said...

எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல். இந்த பாடல் எனக்கும் மிக பிடிக்கும். அருமையான பகிர்வு. நன்றி பத்மா.

தினேஷ்குமார் said...

இனிய தீபவொளி வாழ்த்துக்கள்

செவிடனும்
செவியுணர
கேட்க்க
செந்தமிழ்
வரிகள்
கசக்குமா
அன்றும் என்றும்............

காமராஜ் said...

எல்லா பக்கமும் பாட்டாலே நிறம்பி வழியுதே.எதிர்காலத்தில் இசைத் துறையைக் கலக்குவதாகத்திட்டமா?. ம்ம்ம்ம்...இனிமையான திட்டம்தான்.

க ரா said...

அழகான அமுத கானம் பத்மா.. நன்றி

ஹேமா said...

நீண்ட காலத்துக்குப் பிறகு இந்தப் பாடலைக் கேட்கிறேன் பத்மா.ரசித்தேன்.நன்றி நன்றி.

எஸ்.கே said...

இனிமையான பாடல்! நன்றி!

அப்பாதுரை said...

ஆகா!

முகுந்த்; Amma said...

எனக்கு பிடித்த பழைய பாடல்களில் இதுவும் ஒன்று. அருமை.

தீபாவளி வாழ்த்துக்கள்.

Philosophy Prabhakaran said...

முதல்முறையாக இந்தப் பாடலை உங்கள் தயவால் கேட்டிருக்கிறேன்... நன்றி...

Chitra said...

அருமையான பாடலை பகிர்ந்தமைக்கு நன்றிங்க.

Prabu M said...

//நான் கெஞ்சினால் அவள் தர மாட்டாள் ,நீயாகவே வாங்கிகொள் ,இதும் அவள் சொல்லிக்கொடுத்தது தான் என பிதற்றும் காதலனை நாம் ரசிக்காமல் இருக்க முடியுமா ?//

காதலனை அவன் காதலிக்கும் பெண் தவிர மற்ற அனைவரும் வெளிப்படையாக ரசிக்கிறார்கள் :)

உங்கள் ரசனையை நாங்களும் ரசிக்கத் தந்ததற்கு நன்றி பத்மா :)

ADHI VENKAT said...

இனிமையான பாடல்களில் இதுவும் ஒன்று. மீண்டும் கேட்க வாய்ப்பு தந்தமைக்கு நன்றி.

r.v.saravanan said...

இனிமையான பாடல்! நன்றி

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் பத்மா

uma said...

old is always gold ma!!!!!!!

மே. இசக்கிமுத்து said...

கவித்துவம் கொண்ட பாடல் வரிகளும் டி.எம்.எஸ் கனீர் குரலும் எத்தனை முறை கேட்டாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.........

சுைரை சித்தர் said...

எழுதப்படாத உண்மைகள். வாழ்க