Saturday, March 15, 2008

மௌனம்

என்னவெல்லாமோ பேச
என்னை முனைபடுத்தியிருந்தேன்.
நேற்று பூத்த முதல் ரோஜா.....
முகத்தில் விழுந்த முதல் மழைத்துளி......
என்னிடம் புன்னகைக்கும் அந்தக் குழந்தை.....
பார்த்தவுடன் வாங்கிய பிரிய சேலை.......
பாதி மட்டுமே நினைவில் உள்ள நாமிருந்த கனவு......
மனதறியாமல் நோகடிக்கும் நிகழ்வு.......
வாழ்ந்தேகாட்டுவேன் என நான் எடுத்த முடிவு.........
வாங்க நினைக்கும் அந்த குட்டி நாய்குட்டி......
என பட்டியல் போட்டுத்தான் வந்தேன்,
உன் முகம் பார்த்ததும்..
புரிதலுடன் கூடிய புன்னகை கண்டதும்...
சொல்ல வந்ததெல்லாம் சொன்னாற்போல்...
ஓர் உணர்வில்,
வார்த்தைகளே இல்லா வார்த்தைப் பரிமாற்றத்தில் நாம்!

5 comments:

ரூபஸ் said...

யதார்த்தம் உங்கள் வார்த்தைகளில் வழிந்து கவிதையை இனிமையாக்குகிறது..

Anonymous said...

Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If ossible gives a last there on my blog, it is about the Aparelho de DVD, I hope you enjoy. The address is http://aparelho-dvd.blogspot.com. A hug.

மே. இசக்கிமுத்து said...

இரண்டு அன்புள்ளங்களிடையே பரிமாற்றம் நடைபெற வார்த்தைகள் தேவையில்லை தான்!!

Unknown said...

மனதறியாமல் நோகடிக்கும் நிகழ்வு.......
வாழ்ந்தேகாட்டுவேன் என நான் எடுத்த முடிவு......... nalla varigal padma

ரிஷபன் said...

சொல்ல வந்ததெல்லாம் சொன்னாற்போல்...
ஓர் உணர்வில்,
வார்த்தைகளே இல்லா வார்த்தைப் பரிமாற்றத்தில் நாம்
ஆஹா! வார்த்தைகள் வந்தாலும் அழகு.. வராமல் போனாலும் அழகு..