Friday, March 14, 2008

மனமும் புற்றும்

உள்ளே உறைவது
யாதென அறியா
பயத்தில் பால் வார்க்கும் மக்கள்.....
எறும்புகள் ஊறும்,
இல்லை,
வெற்றிடமாய் வெளிறும்......
எறும்பு மொய்த்த
வெற்றிடத்தில்,
சீறும் நாகம்
உறங்கக் கூடும்!
உள்ளிருப்பது என்னவென்று
வெளிப்படுத்தா விதத்தில்
மனமும் புற்றும்.....
விடமுடைய பாம்பின்
உறைவாய்......
விடத்தையும் விஞ்சும்
எண்ணங்களின்
உறைவாய்......
மனமும் புற்றும்.......
மனமெனும் புற்றும்.......

3 comments:

quest4gold said...

Bravo, looks like a tsunami of thoughts just carrying the reader away with its force

solly

kuthubg said...

arumai arumai..vaazthukkal

ரூபஸ் said...

உண்மைதான்..