Tuesday, March 11, 2008

அன்புக்கும் அளவு!!

உன் மீது நான் கொண்ட
அன்பின் ஆழம் கூற
கடலும் ஆகுமோ ஓர் அளவு
இலலை
வானமும் வணங்குமோ பெரிதளவு!!
உழைக்கும் மனிதனின்..
வேர்வையின் மதிப்பு...
தன்னம்பிக்கை கொண்டவனின்
மனதின் செழிப்பு...
தன்மானம் காத்திடும்
ஒருவனின் செருக்கு.....
உண்மையே உயிரெனக்
கொள்பவனின் மிடுக்கு...
இவை யாதிலும்
பெரிதெனக் கூறுவேன் யான்......
இதனினும் மேலாய்
அறியவும் வேண்டினால்
கூற்றுவன் வந்தெனைக்
கவரும் காலை.....
உன் மீது நான் கொண்ட
என் அன்பு மட்டும்
விட்டு விலகா நாய்குட்டியாய்
சுற்றிடும் உன் காலை....
என் அன்பின் ஆழம்
உணர்வாய் அவ்வேளை!

4 comments:

Anonymous said...

அருமை பத்மா. ஆழ்ந்த உணர்வை அழகாக வெளிப்படுத்தி உள்ளீர்கள். வாழ்த்துக்கள்!

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

கவிதை பழகுகிறீர்கள்..
நிறையப் படிக்கும் போது,கவிதைகள் மாண்புறும் !

மே. இசக்கிமுத்து said...

நம் அன்பானவர்கள் நம்முடைய அன்ப‍ை அறிந்துகொள்ளும் அந்த வேளை ஆனந்தத்தின் சோலை!!

ரிஷபன் said...

உங்கள் கவிதை முயற்சிகளில் ஒரு தேடல் தெரிகிறது..