Friday, December 7, 2007

சேமிப்பு

என் பொழுதெல்லாம்
வீணாக்குகிறேன்
என புலம்புபவர்களுக்கு
என்ன தெரியும்?
நாம் பேசிய கணங்களை......
நாம் பழகிய நாட்களை.......
நாம் சிரித்த நொடிகளை......
நாம் சிந்தித்த செயல்களை....
நாம் மௌனித்த வேளைகளை.......
நாம் ரசித்த நிமிடங்களை எல்லாம்.......
ஞாபகப் புகைப்படமாக்கி
மகிழ்ச்சியில் காயப்போட்டு
நினைத்து நினைத்து
வாழும் தருணங்களில் தான்....
என் மீதி கால வாழ்விற்கான
உயிர் மூச்சையே
நான் சேகரிக்கிறேன் என!!!!!

5 comments:

balag said...

People save what they percieve as precious. Now we know, what you value most.

balag said...

People save what they percieve as precious. Now we know, what you value the most.

M.Rishan Shareef said...

நினைவுகள் மட்டும் இல்லையெனில் என்றோ விரக்தியுற்றுத் திரிந்திருப்போம்.நல்ல நினைவுகள் கூடவே இருந்து அனுபவமாய் வழிநடத்தும்.

kuthubg said...

.................................
.................................
.................................
.................................
verenna solla....

மே. இசக்கிமுத்து said...

நினைவுகள் தான் இந்த நிலையற்ற வாழவில் கொஞ்சம் நிம்மதியை தருவிப்பவை!! நல்ல பதிவு!!